பொன் நகையை விட கவரிங் நகை களில் பல டிசைன்களை செய்து பெண்களை மகிழ்விக்கும் தொழிலாளர்க ளின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை. கனவுகளில் மட்டுமே பொன் நகை களை போட்டு அழுகு பார்க்கும் பல ஏழை பெண்களுக்கு கவரிங் நகைகள் வரப்பிர சாதமாக இருந்து வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரம் கவரிங் நகைகளுக்கு பிரசித்த பெற்ற தாகும். இன்றும் பல பெரு நகரங்களில் கடையின் விளம்பர பலகைகளில் சிதம்ப ரம் கவரிங் என்று எழுதி வைத்திருப்பதை காண முடியும்.
இந்த தொழிலில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் நாளடைவில் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக கவரிங் நகை செய்யும் பணிகள் தற்போது இயந்திரம் மூலம் நடைபெறு வதால் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள வர்களின் எண்ணிக்கை கனிசமாக குறைந்து விட்டது. ஒரு கவரிங் தொழிலாளி ஒரு நாள் முழு வதும் உழைத்தால் ரூ 200 முதல் ரூ. 300 வரை மட்டுமே கிடைக்கும். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட தால் இந்த தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வாழ்வா தாரத்தை இழந்து அவதிப்படுகின்றனர். இவர்களில் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அரசின் நிவார ணத் தொகை வழங்கப்பட்டது. ஆனால் பெரும்பாலோனோர் நலவாரியத்தில் பதிவு செய்யப்படாததால் அவர்களுக்கு நிவாரண உதவி கிடைக்கவில்லை. எனவே அரசு இந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகை யில், இவர்களை முறையாக கணக்கெடுத்து நிவாரண உதவி 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என சி.ஐ. டி.யு. கோரிக்கை விடுத்துள்ளது.
-காளிதாஸ்